புதன், 26 அக்டோபர், 2011

சோமிதரனும் அவர்தம் ஆவணப்படங்களும்

 
தமிழ் என்ற அடையாளத்தைக்   கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன் மூலம் அதனை அழிக்க முயல்கிறது இந்தியா . இலங்கை  நேரடியாகவே தமிழின   அழிப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. மலேசியா, காதல் இல்லாமல் மனைவியோடு குடும்பம் நடத்துவது போல தமிழ் மொழியையும் மக்களையும் பண்பாட்டையும் நடத்துகிறது . சிங்கப்பூர், தமிழ் மொழியையும் மக்களையும் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது. இலங்கை பிரச்சனை தொடர்பாக கருத்து கூறிய சிங்கப்பூர் நாட்டைச் செதுக்கிய சிற்பி லீ க்வான் யூ,   “தமிழர்கள் அடிபணிந்து கிடப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை மனஉறுதி நிரம்பவே கொண்ட ஓர் இனத்தின் மக்கள் அவர்கள்” என்கிறார் . இவ்வாறு உலகம், தமிழ் அடையாளம் தொடர்பான கொள்கைகளோடு இயங்க, தமிழர்கள் தமது கடந்தகால  வரலாற்றை எவ்வாறு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் ? என்ற கேள்வியைக் கேட்டால் தமிழர்களிடம் பதிலில்லை . வரலாற்றுப் புரிதலும் இல்லை . “விதியே , விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ” என்று பாரதி நோவது போல நோவதைத் தவிர வேறு வழியும் இல்லை போலும் . இந்த நிலையில் தமிழன அழிப்பு வரலாற்றில் யாழ்ப்பான நூலக எரிப்பு நிகிழ்வு முக்கியமான ஓன்று . ஒரு இனத்தின் மொழியை அழித்துவிட்டால் அந்த இனம் தானாக அழிந்துவிடும். என்ற கோட்பாட்டை மனதில்கொண்டே தமிழர் ஆவணக் கருவூலமான யாழ்ப்பாண நூலகம்  சிங்கள அரச பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது .                                      ஆவணப் படங்கள் வரலாற்று நிகழ்வுகள் குறித்த புரிதலை இளம் தலைமுறையினர்க்கு ஏற்படுத்துகிறது . வரலாறு முழுமையாக ஒரு இனத்தால் புரிந்து கொள்ளப்ப்படுமானால் அவ்வினம் தனியுரிமை பெற்ற இனமாகும் . அந்த வகையில் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வை திரு சோமிதரன், எரியும் நிகழ்வுகள் Burning Memories என்று ஆவணப் படமாக்கியுள்ளார். சோமிதரன் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்தவர் .சென்னையில் உயர்கல்வி பயிலும் இவர் இலங்கை இறுதி யுத்தம் பற்றிய முல்லைத்தீவு சாகா என்ற ஆவணப் படத்தையும் இயக்கியுள்ளார்   கேரள மாநிலத் தலைநகர் திருவானந்தபுரத்தில் நடைபெற்ற 4வது சர்வதேசத் ஆவணத் திரைப்பட விழாவில்  சோமிதரன் இயக்கிய முல்லைத்தீவு சாகா திரைப்படத்திற்க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.கேரள முதலமைச்சர் உம்மான் சாண்டி இந்த விருதினை வழங்கினார்.பிரபல இயக்குனர் பிரியதர்சன் மற்றும் கேரள அமைச்சர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
              
 ஐந்து  நாட்கள் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.இந்தியாவில் ஆவணப்படதிற்கென வருடாவருடம் வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது இந்த விருது. முல்லைத்தீவு சாகா திரைப்படம் ஈழத்தில் நடைபெற்ற இறுதியுத்தம் குறித்து 2010 ஆம் ஆண்டில் எடுக்கப் பட்டது. முல்லைத்தீவு மண்ணில் போருக்கு முன்னர் இறுதியாக நடைபெற்ற கண்ணகி கூத்துக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் இந்தப் படம் போர் விதிமுறைகளை மீறி  மக்கள் கொல்லப் பட்டதையும் சிதைந்து போன மக்களின் வாழ்வையும் காட்சிப் படுத்தியிருகிறது. ஈழத் தமிழர் வரலாறு பற்றிய வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி   போன்ற தமிழர் வரலாற்றின் தவிர்க்க முடியாத ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் .        

திங்கள், 24 அக்டோபர், 2011

தொன்மொழியான தமிழ்மொழி குறித்த குறுஞ்செய்திகள்


          ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன வடமொழியிலும் தமிழ் , பிராகிருதம் , பாலிமொழிச் சொற்கள் கலந்துள்ளன இதேப்போல் தமிழிலும் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன . பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டால் உலகின் பலமொழிகள் இயங்காது ஆனால் பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டாலும் தமிழ்மொழி இயங்கும் . மிகுதியான வேர்ச் சொற்களைக் கொண்டது  தமிழ்மொழியாகும் அதனால் புதிய கலைச் சொற்களை தமிழ் மொழியில் உருவாக்கிக் கொள்ள முடியும்                கன்னடம் , தெலுங்கு , மலையாளம் , துளு போன்ற திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் பிராகுயி போன்ற வடநாட்டு  மொழிகளுக்கும் தமிழ்மொழி தாயாக விளங்குகிறது . ஆயிரத்து எண்நூறு மொழிகளுக்கு வேர்ச்சொறகளையும்  நூற்று எண்பது மொழிகளுக்கு உறவுப் பெயர் களையும் தந்து உலக மொழிகுளுக்கு எல்லாம் தாயாகத் திகள்கிறது 
                                                           
        உலக இலக்கியங்களில் முதன்மைபெற்ற சங்க இலக்கியங்களின் மொத்த வரிகள்  26,350 . இந்த அளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் , உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை என்பது உலக இலக்கியங்களை ஆராய்ந்த செக் நாட்டு மொழியியல் அறிஞர் கமில்சுவலபிலின் கருத்தாகும் .                                             தமிழ் மிகவும் பண்பட்ட மொழி என்று மக்சுமுல்லர் குறிப்பிடுகிறார் . அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் பாராட்டியிருக்கிறார் . நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது தொல்கப்பியமாகும் . இஃது எழுத்து , சொல் , பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுகிறது . தொல்காப்பியரின் ஆசிரியரான அகத்தியர் எழுத்து , சொல் , பொருள் யாப்பு , அணி ஆகிய ஐந்து இலக் கணங்களை அகத்தியம் என்ற பெயரில் எழுதியுள்ளார் . அறிவியல் முறையில் அமைந்த இத்தகைய இலக்கண நூல்கள் தோன்றியதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி செம்மைநிலை அடைந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாகும் .
                சங்க இலக்கியங்கள் தமிழரின் பட்டறிவின் வெளிப்பாடுகள் ; அறத்தை வலியுறுத்துவன “ பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”  , “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “ முதலிய பண்பாட்டு நெறிகளை உலகுக்குக் கூறுகின்றன .” யாதும் ஊரே யாவரும் கேளிர் “  என உலக மக்களை உறவுகளாக்கியது புறநானூறு . “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று மக்கள் அனைவரையும் சமநிலையில் பார்க்கிறது திருக்குறள் . இவற்றோடு தமிழானது எக்காலத்திற்கும் பொருந்தும் மொழியில் கோட்பாடுகளை பெற்றிருப்பதோடு காலப்புதுமைக்கும் கணினிப் பயன்பாட்டுக்கும் ஏற்றதாகும்      

தமிழில் கொஞ்சம் கலைச் சொற்களைத் தெரிந்து கொள்ளலாம்



1 . கடவுச் சீட்டு
Pass port
2 . இருப்புப் பாதைக் கடவு
level crossing
3 . ஒருவழிச் சாலை
one way
4 . சாளரம்
window
5  காலதர்
ventilator
6 . பலகணி
Jolly
7 . படி 
Copy
8 . படப்படி
Xerox copy
9 . அடைவு
Index
10. கண்காணிகள்
Supervisor
11 அணுக்கர்
Personal Assistant (P A)
12 அணுக்க ஏவலர்  
Personal Peon
13 பிடிவிளக்கு
Torch
14 மட்கலன்   
Earthen Ware
15 அடுகலன்   
Cooking Ware
16 அலகுகள்
Units
17 கட்டுமரம்
Kattumara
18 வெள்ளிரும்புக் குவளை
Ever silver Tumbler
19 பொத்தான்
Button
20 கோக்குவாய்
Hook
21 துணி மேற்கட்டி
Shamiana

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

உளுந்தங்கஞ்சியும் உளுந்தஞ்சோறும்

சுவையான, மணமான உளுந்தங்கஞ்சி, உளுந்தஞ்சோறு  இவை இரண்டும் எங்கள் கன்னியாக் குமரி   மாவட்டத்தில் மிகவும் பிரபலம். இவை என்னைக் கவர்ந்த உணவுகளாகும் . மேற்கண்ட உணவு வகைகள் இரண்டையும் தயாரிப்பதும் சுவைப்பதும் கலையானது மட்டுமல்ல  சுவையானதுமாகும்  . நமது மரபார்ந்த உணவுவகைகள், நமது  மண்ணும் நமது பருவச்சுழலும் நமது மொழியும்  இணைந்து உருவாக்கியவை கண்டிப்பாக நமது உடலுக்கு நன்மை பயப்பவை .
நாம் வெப்பமண்டல வாசிகள். எனவே, நமது உடலுக்கு   நீர்ச்சத்து அதிகம் தேவை ; இதனால் நம் முன்னோர்களால் பருவச் சூழலுக்கு ஏற்ப  உருவாக்கப் பட்டதுதான் இந்தக்  கஞ்சி . கஞ்சி ஒரு எளிய உணவு; பொதுவாக பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர்வரை  எங்கள் ஊரில் சோற்றைக்கூட  கஞ்சி என்று குறிப்பிடும் பழக்கம் இருந்தது . கஞ்சியில் பல வகைகள் உண்டு. அதில் பழைய கஞ்சியும்  ஒரு வகை. பழைய கஞ்சி என்பது முந்தைய நாள் மீதமிருக்கும் வடித்த  சோற்றை சோறு வடித்த கஞ்சித் தண்ணியும் தண்ணீரும் கலந்து வைத்துவிடுவார்கள் மறுநாள் காலை அது பழைய கஞ்சியாகிவிடும் . இக் கஞ்சியோடு இதனைப் பருகும் போது மோர் அல்லது தயிர் கலந்து தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து உண்பர் . தொட்டுக் கொள்ள துவையல் அல்லது ஊறுகாயைப் பயன்படுத்துவர் .
உளுந்தங்கஞ்சி செய்வது மிகவும் எளிது. ஒரு கிண்ணம் புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனோடு பாதிக்கும் சற்று குறைவாக முழுஉளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும் . இவற்றோடு இரண்டு தேக்கரண்டி வெந்தயமும் சேர்த்து சோறு சமைப்பதற்கு நாம்   பயன்படுத்தும் தண்ணீரைவிட சற்று அதிகமாக தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட வேண்டும் . சற்று வெந்தவுடன் கொஞ்சம் பூண்டு சேர்த்துக் கொள்ளவேண்டும் பின்னர் இளம்தேங்காய்த் துருவல் சேர்த்து வேகவிட வேண்டும் தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து அனைத்தும் நன்கு வெந்தவுடன் இறக்கி சற்று சூடு ஆறியவுடன்  சாப்பிட, சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு நமக்குக் கிடைத்துவிடும். இதனைப் பருகும் போது , தொட்டுக் கொள்ள துவையல் அல்லது ஊறுகாயைப் பயன்படுத்துவர் .. மரபார்ந்த உணவான இது தற்போதைய தலைமுறைக்குத்  தேவையானது மட்டுமல்ல பயனுடை யதும்கூட .

செய்முறையில் உளுந்தஞ்சோறுக்கும் உளுந்தங் கஞ்சிக்கும் பெரிய வேறுபாடு இல்லை . தண்ணீரை அளவாக வைத்து சோற க்கும் பதத்தில் எடுத்தால் உளுந்தஞ்சோறு ஆயத்தம். உளுந்தஞ் சோறுக்கு தொடு கறியாக நாட்டுக் கோழிக் குழம்பு கண்டிப்பாக அவசியம். உளுந்தஞ் சோறும் கோழிக் குழம்பும் உலகின் சுவையான உணவு வகைகளில் ஒன்றாகவே நான் கருதுகிறேன். மேற்கண்ட உணவு வகைகளை சுவைப்பதோடு தமிழ்மக்களுக்கும் பரப்புங்கள். இதன் ஆற்றலை துறைசர்ந்தவர்கள் ஆய்ந்து உலகுக்குச் சொல்லுங்கள் .
நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வயலில் வேலைசெய்த விவசாயிகளோடு  உளுந்தங்கஞ்சி குடித்த எனது அனுபவம் மறக்க முடியாதது . உணவு வேளையில் நான் சென்றதால் எனக்கும் கஞ்சி பரிமாறப்பட்டது . கஞ்சி பரிமாறப்பட்ட தட்டும் அள்ளிப் பருகத்  தரப்பட்ட தேக்கரண்டியும் இன்றும் மறக்க முடியாதது . மண் தரையில் சிறியஅளவில் குழி பறிக்கப் பட்டது அதில் ஒரு வழையிலை அந்தக்  குழியில் பொருந்துமாறு வைக்கப்பட்டு அதில் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்த அமைப்பு நல்ல குழிந்த ஒரு தட்டில் கஞ்சி ஊற்றப்பட்டிருந்தது போன்று இருந்தது . அள்ளிப் பருக தேக்கரண்டி, பலா இலை ஒன்றை வளைத்து உருவாக்கப் பட்டிருந்தது . உணவோடு கலந்திருக்கும் இயற்கையையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும் .
மேற்கண்ட உணவு வகைகளுக்கும் சங்ககால உணவு வகைகளுக்கும்  தொடர்பு இருப்பதை சங்க இலக்கிய வரிகள் நமக்குக் காட்டுகின்றான உளுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை என்பது மேற்கண்ட உளுந்தங் கஞ்சியையோ அல்லது உளுந்தஞ் சோற்றையோ குறிப்பதாகவே இருக்கும். எனவே இவ் உணவுவகைகளை நமது மரபு உணவுகள் என்று கொள்ளலாம்.
                                                     

வெள்ளி, 21 அக்டோபர், 2011

பனைமரம் என்ற உணவு



 
                       தொல்காப்பியத்தின் உயிர் மயங்கியல் நூற்பா ஓன்று ‘பனை முன் கொடிவரின்’ என்று பனைக் கொடிக்கு விதி கூறுகிறது இங்ஙனம் பனைக்கொடியை தனியே எடுத்துக் கொண்டு ஆசிரியர் விதி கூறுதலிநின்று பனை இலச்சினை பொறிக்கப் பட்ட கொடி அதிகஅளவில் மக்களோடு புழங்கியது என்று கொள்ளலாம். பனைக்கொடி கண்ணனின் அண்ணன் பலராமனின் கொடியாகும் . மூவேந்தருள் சேரர் பனம்பூ மலையை தமது அடையாள மாலையாகக் கொண்டிருந்தனர் . தமிழ்நாட்டு அரசின் அடையாள மரம் பனைமரமாகும் . இவ்வாறு பனைமரமானது வரலாறு தொடங்கிய காலம் தொட்டு தமிழக இறை, இயற்கை, அரசியல் , இலக்கியம் ,பண்பாடு, மக்கள் என பல்வேறு தளங்களில்  பயணம் செய்து இன்றளவும் உயர்ந்து நிற்கிறது.
               காலமாற்றத்தில் சமூக பண்பாட்டுக் கலப்பும்  தவிர்க்க முடியாததுதான். இக்கலப்புகள் தமிழக மக்களிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டன  ; இம்மாற்றம், காலம்காலமாகத்  தம்மோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த பனைமரம், அது உருவாக்கிய உணவு , புழங்கு பொருட்கள் சமூகம்,பொருளாதாரம் என அனைத்தும் இந்த மண்ணிலிருந்து   தேடினாலும் கிடைக்காத அளவிற்கு அப்புறப்படுதிவிட்டது
                 பனைமரம் தரும் உணவு நூறு விழுக்காடு  இயற்கையானது காரணம் பனைமரத்தை யாரும் உரம்போட்டு மருந்து தெளித்து வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாக வளர்ந்து இயற்கையான உணவைத் தருகிறது. ஆனால் நவீன உலகம் கவர்ச்சியானை விளம்பரங்களால்   பொட்ட லப் படுத்தப்பட்ட உணவின் பின்னே சென்றுகொண்டிருக்கிறது. எனவே பனை தரும் உணவு பதிவுசெய்யப்பட்டு  வருங்கால தலைமுறைக்கு காட்சிப் பொ ருளாகவாவது தரவேண்டியது நமது கடமை .
                   பனைமரம் நேரடியாக நமக்குத் தரும் உணவு நுங்கும் பதநீரும் ஆகும் . அப்பதநீரை அக்கானி என்றும் அழைப்பர் . நுங்கையும் பதநீரையும் சேர்த்து கலந்து சுவைப்பது தனி அனுபவம் . பதநீரை அதற்கான சட்டியில் இட்டு குறிப்பிட்ட வெப்பநிலை வரும்வரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற பனை வெல்லத்தினைப் பெறமுடியும் . பனை வெல்லம் கொண்டு பல்வேறு இனிப்புப் பண்டங்கள் செய்யமுடியும் . கருப்பட்டிக் காப்பியும் செய்து பருகமுடியும் . கருப்பட்டிக் காப்பியில் கைச்சுத்து முறுக்கைப் பொடித்துப் போட்டு காப்பி குடிப்பது தனிசுகம் . எங்கள் குமரி மாவட்டத்தில்  கருப்பட்டி கலந்து செய்யப்படும் பணியாரம் தனித்தன்மை வாய்ந்தது .
               பதநீரை காய்ச்சும்போது அது கருப்பட்டியாக உருவவதற்குமுன் பாகு (கூழ் ) போன்ற நிலையை அடையும் . அப்போது மரவள்ளிக் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அப்பாகுடன் கலந்து கிளறி அது கருப்பட்டியாக இறுகும் நிலையில் இறக்கி வைத்துவிட வேண்டும்; அப்போது கிழங்கு நன்கு வெந்துவிடும். சிறிது நேரம்கழித்து சூடு ஆறியவுடன் கருப்பட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் கிழங்கை   எடுத்துச்சுவைத்தால்  சுவையுடையதாக இருக்கும் . இச்சுவை இறையனுபவம் போன்றது .
                   பனை தரும் உணவு வரிசையில் பனங்கிழங்கு, பனம்பழம் போன்ற வற்றிர்க்கும் முக்கிய இடம் உண்டு பனங்கிழங்கு  ஊட்டச்சத்து மிகுந்த ஒரு கிழங்காகும். பனம்பழத்தை தீக்கனலில் நன்கு சுட்டு பின்னர் மேல் தோலினை நீக்கி கொட்டைமீது ஒட்டிக்கொண்டிருக்கும் சக்கையை அருவாள் கொண்டு கொத்தி தனியே பிரித்தெடுத்து ஒரு பானையில் போட்டு பனங்கருப்பட்டி சேர்த்து சிறிது வேகவிட்டு எடுத்து சுவைக்க, இவ் இயற்கைப் பக்கணத்தின் சுவைக்கு நிகரான வேறு எதுவும் இல்லை. கோக்கும், பிஸ்கெட்டும் கேக்கும் ,நூடுல்சும் ஆட்சி செலுத்தும் இடத்தில் பனைஉணவை எங்கு தேடுவது.  
           நன்றி : Softview Media College , Tamil Heritage Foundation       
           

பெருமைமிகு பேருயிர்

                                                      
                    வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளிவந்தபோது ‘ஐயா வாரணம் என்றால் என்ன ஐயா’ ? என்று விடையைத் தெரிந்து வைத்துக் கொண்டே என்னைப் பல மாணவர்கள் கேட்டனர். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற அரசின் திட்டத்தில் விளைந்த சிறு நன்மைகளுள் இதுவும் ஓன்று மாணவர்கள் ஒரு பழந்தமிழ்ச் சொல்லை கற்றுக்கொண்டார்கள்.
                             யானையைக் குறிக்க ஆங்கிலத்தில் எத்தனைச் சொற்கள் உள்ளன ? என்று நான் மாணவர்களிடம் கேட்டேன் மாணவர்கள் யானையைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களைத் தேட ஆரம்பித்தனர். Elephant , Tusker , Pachyderm என்று முயன்று தேடி மூன்று சொற்களைச் சொன்னார்கள் . அவர்கள் இன்னும் தேடினாலும் இந்த மூன்று சொற்கள் மட்டும்தான் மீண்டும் கிடைக்கும் . காரணம் யானையைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள் இந்த மூன்று சொற்கள் மட்டுமே .
                          யானை என்பது நமது சூழலியல் சொத்து . நமது மண்உருவாக்கிய மதிப்புறு செல்வமது. இவ்வுலகின் மிகப் பழைய காட்டுயிர் களில் யானையும் ஓன்று யானைகளில் இரண்டுவகைகள் உண்டு ஆப்பிரிக்க வகை மற்றொன்று ஆசியவகை. ஆசியவகை அழிவின் விளிம்பில் உள்ளது காரணம் மொத்தம் 50,000 ஆசியயானைகள் மட்டுமே தற்போது உள்ளன . ஆப்பிரிக்க யானைகளைப் பொறுத்தவரை 3,00000 யானைகள் உள்ளன.ஆசியவகை யானைகளில் 60 % யானைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில்தான் வாழ்கின்றன எனவே யானை நமது மக்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல் நமது படைப்புகள் முழுவதும் தன்னுடைய இடத்தையும் தக்கவைத்துக் கொண்டது . இதனால் யானை தமிழ்மொழி முழுவதும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு பெருமை பெறுகிறது. ஆனால் நமது இளந் தலைமுறை மாணவர்கள் யானையே இல்லாத ஒரு நாட்டின் மொழியில் யானையை இனம் காண்கிறார்கள். இது நாமாகத் தேடிக்கொண்ட அடிமை அடையாளமிது .
தமிழ்மொழி யானைக்குத் தந்திருக்கும் பெயர்களைப் பார்ப்போம்
                யானை, அத்தி, வேழம், அத்தினி, களிறு, பிடி, கரி, கலபம், மாதங்கம், கைமா, வாரணம், அஞ்சனம், அல்லியன், ஆம்பல், ஆனை, குஞ்சரம், தும்பு, வல்விலங்கு.
                           போன்ற பல்வேறு பெயர்ச் சொற்களால் யானை சுட்டப்படுகிறது. அல்லியன் என்பது 60 வயதைக் கடந்த யானை அல்லது தன் குழுவை விட்டுப் பிரிந்த யானை . களிறு என்பது ஆண்யானை. பிடி என்பது பெண்யானை. இன்றும் கேரள மக்கள் பிடி ஆன என்று பெண் யானையையும், கொம்பன் ஆன என்று ஆண்யானையையும் குறிப்பிடுகின்றனர் . எனவே நமது சூழலியல் சொத்தின் பெயர்களைப் பரப்புவோம் காட்டுயிர்களைப் பாதுகாப்போம் .