செவ்வாய், 19 ஏப்ரல், 2011

யார் பொறுப்பு ?



                            
        “கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கிச் செரித்து , சுயமுகத்தை இழக்காமல் எந்த ஒரு சமூகம் தன்னைப் புத்துருவாக்கம் செய்துகொள்கிறதோ அதுவே உலகை வழிநடத்தக் கூடிய நிலைக்கு உயர்கிறது”
                        தமிழ் மண்ணே வணக்கம்! விகடன் பிரசுரம்  
             பருவ காலங்கள் எத்தனை வகைப் பாடும் ? ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் நான் கேட்ட கேள்வி இது . ஒரு மாணவன் நான்கு என்று உடனே பதில் கூறினான் . நான் பதிலைக் கேட்டு சற்று அதிர்ந்தாலும் , அந்த நான்கு பருவங்கள் எவை ? என்று அந்த மாணவனைக் கேட்டேன் . மாணவனும் மிகத் தெளிவாக summer , winter , autumn , spring ,என்றான். மற்ற மாணவர்கள் , இது தமிழ் வகுப்பு தமிழில் கூறு என்றனர் . உடனே பதில் கூறிய மாணவன் தமிழில் கூற முயற்சித்து தோற்றாலும் தனது மொழி பெயர்பில் ஓரளவு வெற்றியும்  பெற்றான். summer , winter என்ற இரண்டனுக்கு  கோடைக்காலம் , குளிர்காலம் என்று  மொழி பெயர்த்துச்  சொல்லிவிட்டான் .ஆனால் autumn , spring ஆகிய இரு சொற்களையும் அவனால் மொழிபெயர்க்க முடியவில்லை .  காரணம் மேற்கண்ட இலையுதிர்க்  காலம், வசந்த காலம் ஆகிய   இரண்டு பருவங்களும் அவன் வாழும் நிலப்பரப்பில் இல்லை. எனவே அவனால் மொழிபெயர்க்க முடியவில்லை போலும் . மேற்கண்ட மாணவனின் பதிலுக்கு யார் பொறுப்பு ?
                       மிகத்தொன்மையான மதிப்புறு  பண்பாட்டை உடையவர்கள் நாம் . இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக நாம் வாழ்ந்த வாழ்க்கை ஆவணங்கள் நமக்கு மிகத் தெளிவாக  கிடைக்கின்றன . இவ் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பல மதிப்புறு கூறுகளை உலகிற்கு நாம் தரவேண்டியுள்ளது . இவ்வாறான மதிப்புறு கூறுகளை உலகிற்கு நாம் வழங்காது போனால் அது உலகிற்கும் நமக்கும் பேரிழப்பாகும் .  மேற்கண்ட வினாவும் அதற்கான விடையும் தமிழனின் தொன்மையான  மதிப்புகளின் அடையாளமாகும் .
                             பருவகாலங்களை ஆங்கிலேயர் அவர்களது சூழலுக்கு ஏற்ப நான்காகப் பிரித்துக் கொண்டனர் . இது அவர்களது சூழலுக்கு ஏற்ப அவர்கள் பிரித்துக் கொண்டதாகும் . நாம் வாழும் இந்த மிதவெப்பமண்டலப் பரப்புக்கு autumn , spring போன்ற பருவ காலங்கள் இல்லை . அனால் ஆங்கிலவழிக் கல்வியால் நமது சூழலில் இல்லாத ஒன்றை ; நம் நிலத்துக்குப் பொருத்தம் இல்லாத ஒன்றை குருட்டுத்தனமாக பயின்று வருகிறோம் . இதில் நகைப்புக்கு உரிய ஓன்று ஆங்கில வழிக்  கல்விக்கான பாடநூல்களையும்  நாம்தான் உருவாக்குகிறோம் .
                          தமிழர் ஓர் ஆண்டின் பருவ காலங்களை  ஆறாகப் பகுத்திருந்தனர் அவை  இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ,பின்பனி ஆகியனவாகும் . ஒவ்வொரு பருவமும் தலா இரண்டு மதங்கள் காலஅளவு கொண்டது . இதனைத்  தமிழர் பெரும்பொழுது என பெயரிட்டு அழைத்தனர் .         
பருவகாலங்கள்
        உரிய மாதங்கள்
இளவேனில்
சித்திரை – வைகாசி
முதுவேனில்
ஆனி – ஆடி
கார்
ஆவணி – புரட்டாசி
கூதிர்
ஐப்பசி – கார்த்திகை
முன்பனி
மார்கழி  - தை
பின்பனி
மாசி – பங்குனி
          இதைப் போன்று ஒரு நாளையும் தமிழர் ஆறு கூறுகளாகப் பிரித்து வழங்கி வந்தனர்  .  அவை வைகறை , காலை , நண்பகல் , எற்பாடு , மாலை , யாமம் ஆகியனவாகும் . இவற்றை சிறுபொழுது என்று பெயரிட்டு அழைத்தனர் 
     சிறுபொழுது
       காலம்
     மணிநேரம்
வைகறை
இரவுப் பொழுதின் இறுதிப்பகுதி   
02 - 06
காலை
பகற்பொழுதின் முற்பகுதி
06 - 10
நண்பகல்
பகற்பொழுதின் நடுப்பகுதி
10 - 14
எற்பாடு
பகற்பொழுதின் இறுதிப்பகுதி
14 - 18
மாலை
இரவுப் பொழுதின் முற்பகுதி
18 - 22
யாமம்
இரவுப் பொழுதின் நடுப்பகுதி
22 - 02



              இவ்வாறு நம்தமிழர் பருவகாலங்கள் குறித்து மிகத் தெளிந்த அறிவைக் கொண்டிருந்தனர் . ஆனால் ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்கள் மேற்குறித்த செய்திகளில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டுள்ளனர்   நாம் தெரிந்துகொள்ள வேண்டிய , தெரிந்துகொண்டு உலகிற்குச் சொல்ல வேண்டிய நமது மதிப்புறு பண்பாட்டின் சிறு துளி இது மேலும்பல பண்பாட்டுக் கூறுகளை தெரிந்துகொள்வோம்; பரப்புவோம்; வையத்தலைமை கொள்ள முயலுவோம்; வெற்றி நமதாகட்டும் . 



























3 கருத்துகள்:

  1. vanakam aiiya ,
    I am an x cadet .my roll no is 5261 i have seen your articles it rocks & i love your class also sir.to make you recognize me i introduce myself am M.Amarnath and to still make you clear "you have my book named kumari kandam"

    பதிலளிநீக்கு
  2. ஐயா மிக நன்றி மேலும் பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு