வெள்ளி, 18 ஜனவரி, 2013

அடிக்கடி தொலைந்த தண்ணீர்ப் புட்டி



அம்மா அதட்டிச் சொன்னாள்,
இன்றைக்கும் தண்ணி பாட்டிலைத் தொலைச்சே….!
அடி தொலச்சிடுவேன்.
நாளைக்கு தண்ணி கொண்டு போகாமத்தான்
பள்ளிக்கூடம் போவா.
நீ இண்ணைக்கும்
தொலைஞ்சே...., அடி தொலச்சிடுவேன்!
உனக்கு கண்ணு, மூக்கு, காது, ஒண்ணும் இல்ல.
அதான் நீ அடிக்கடி தொலைஞ்சி போறா ! 
மகளும் மிரட்டினாள்,
புதிதாக வாங்கிய பாட்டிலைப் பார்த்து!
தனது குட்டி விரலை நீட்டி.
                                                                       தமிழாசிரியன்