சனி, 28 ஜனவரி, 2012

வரகரிசிக் கஞ்சி , வரகரிசிப் பாயாசம்



 
“வட்ட வட்டப்  பறையிலே
      வரகிரிசி தீட்டயிலே
ஆருதந்த சோமன் சேலை
ஆலவட்டம் போடுதடி”
தொடக்கக் காலத்தில் பாறைகளில் தானியங்களைக் குவித்து வைத்து உலக்கையால் குற்றியிருக்கிறார்கள் . பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் மலைப் பகுதிக் கிராமங்களிலும் இப்படிப்பட்ட பாறைக் குழிகளையும் இவ்வழ  க்கத்தினையும்கூட இன்னும் காணலாம். என்ற பேரா. தொ. பரமசிவனின்   குறிப்பைப் பார்த்தால் , வரகரிசியை மக்கள் தீட்டிய நிகழ்வும் ,சிற்றூர் மக்கள் வரகை தங்கள் வாழ்வின் அங்கமாகப் பயன்படுத்தியுள்ளமையும் வெளிப்படையாக புலப்படும்
 மிகப் பழங்காலந்தொட்டே தமிழக வரலாற்றில் பதிவு பெற்றுள்ள வரகு சங்க இலக்கியங்களிலும் பல்வேறு இடங்களில் பேசப்படுவதைக் காணலாம்   
“மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப
மாமலை புலம்பக் கார்கலித்து அலைப்பப்” - ஐங்குறுநூறு 496, பேயனார்

“பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே”.- குறுந்தொகை 220 முல்லை திணை, ஒக்கூர் மாசாத்தியார்
பழைய மழையில் பூத்த புது வரகின் நுனியை ஆண்மான்கள் மேய பக்கத்தில் காட்டுப் பூனை சிரித்தார்ப்  போல அரும்புகள் மலர்ந்த முல்லை மலர்களை வண்டு மொய்க்கும் மாலைக் காலம் ஆகியும் சம்பாதிக்கச் சென்றவர் வரவில்லை பார்த்தாயா தோழி .   

“விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை
அரலை அம் காட்டு இரலையடு வதியும்” - நற்றிணை 121

  
“கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்” புறநானூறு 215  கோப்பெருஞ் சோழன் கவர்த்த கதிரயுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்  
“எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,
வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே”. - புறநானூறு 327

இவ்வாறு மக்கள் இலக்கியங்களிலும் செவ்வியல் இலக்கியங்களிலும் பதிவுபெற்று மக்களோடு புழங்கிய வரகு, மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து  அகன்றது நம் தமிழ் மக்களின் அறியாமையும், நமது பாரம்பரிய மரபுக் கூறுகளுக்கு நாம் தரும் தரம்தாழ்ந்த தரமும்,   வேற்றுப் பண்பாட்டு மோகமும் மட்டுமே காரணமாக இருக்க முடியும் .

சப்பாத்தி தயாரிக்கப் பயன்படும் கோதுமையில் 3 சதவீதம் நார்ச்சத்துதான் உள்ளது.​ 76 சதவீதம் சர்க்கரை சத்து உண்டு.​ அரிசியில் சர்க்கரைச் சத்து 78 சதவீதம் உள்ளது.​ அதாவது 2 சதவீதம் மட்டுமே கோதுமையைவிட அரிசியில் சர்க்கரைச் சத்து கூடுதலாக உள்ளது.​ ​ஆனால்,​​ குறுந்தானியமான வரகு அரசியில் 65 சதவீதம்தான் சர்க்கரை சத்து உள்ளது.​ 13 சதவீதம் அரிசியை விட மிகக் குறைந்த அளவு சர்க்கரை சத்து வரகு அரிசியில் உள்ளது.​ ஆனால்,​​ நம் பக்கத்தில் விளையும் வரகு அரிசிக்கு நாம் தகுந்த முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான் கவலை தரும் செய்தியாகும் .இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட வரகை நானும் சுவைக்க விரும்பினேன். வரக ரிசிவாங்கிய கடைக்காரரிடம் வரகு குறித்து ஏராளம் செய்திகளை திரட்டிக் கொண்டேன் . அவர் கூறியதில் முக்கியமானது, வரகரிசி முப்பது நாட்கள் முதல் நாற்பத்தைந்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ஆனால் ஐந்து அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை எடுத்து  வெயிலில் நன்கு உலர்த்திப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

வரகைக் கொண்டு என்னென்ன   உணவு வகைகளைச்  செய்யலாம் ? வரகரிசிச் சோறு , வரகரிசி முறுக்கு , வரகரிசிக் கஞ்சி , வரகரிசிப் பாயாசம் போன்றவற்றை நாம் செய்ய முடியும். முதலில் நான் வரகுக்கஞ்சி செய்ய முயற்சித்து வெற்றியும் பெற்றேன். இதனை மிக எளிதாக நாம் தயாரிக்க முடியும். ஒரு குவளை வரகை எடுத்துக் கொள்ள வேண்டும் பாதி குவளை உளுந்து அல்லது சிறுபயறு எடுத்துக்கொள்ள வேண்டும் இரண்டனையும் சுத்தப்படுத்திக் கொண்டு முதலில் உளுந்து அல்லது சிறுபயறை சிறிது வேகவிட வேண்டும் பின்னர் வரகரிசியினை அதனோடு கலந்து வேகவிட வேண்டும் பின்னர்சிறிது  பூண்டு இளம் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வேகவிடவேண்டும் வெந்தபின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை சிறியஅளவில் எரியவிட்டு மற்றொரு அடுப்பில் வானலி  யில் சிறிது தேங்காய் எண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் சிறிது கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், சின்னவெங்காயம் போன்றவற்றை நன்கு வதக்கி வரகுக் கஞ்சியுடன் கலந்து சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும் . தற்போது நாம் சுவைக்க நல்ல சத்தான வரகுக்கஞ்சி ஆயத்தம். தொட்டுக் கொள்ள கொள்ளுத் துவையல் சிறப்பானதாக இருக்கும்.
வரகுப் பாயாசமும் எளிதாகச் செய்யலாம். வரகு அரிசியையும் ​​ பாசிப்பருப்பையும்  லேசாக   வறுக்கவும்.தண்ணீரைக்  கொதிக்க வைத்து,​​ வறுத்த பாசிப்பருப்பை முதலில் போடவும்.பின்னர்,​​ வரகு அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,​​ வடிகட்டிய பாகை அரிசி கலவையில் விட்டு,​​ நன்கு கிளறி கொதிக்க விடவும்.பின் அதில் வறுத்த முந்திரி,​​ திராட்சை ,​​ ஏலக்காய் பொடி,​​ தேங்காய்,நெய்,​​ சிறிது பால் கலந்து   நன்கு கிளறி இறக்கவும்.சுவையான வரகரிசி சர்க்கரைப்  பாயாசம்  ஆயத்தம் . வரகரிசியைப் பயன்படுத்தி, வரகு உற்பத்தியைப் பெருக்கி எதிர்காலத்  தலைமுறைக்கு ஒரு சத்தான இயற்கை உணவைத் தருவோம். இயற்கை வேளாண்மை பெருகட்டும் .

வியாழன், 26 ஜனவரி, 2012

சிங்கப்பூர் அதிபர் திரு. எஸ். ஆர். நாதன் : மாணவர்கள் அறிந்துகொள்ளவும் பின்பற்றி நடக்கவும்




மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக செயல் பட்டுவந்த சட்ட அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்த செல்லப்பனின் இனிய மகன் ராமநாதன். ராமநாதனின் தந்தை பணியாற்றிய அலுவலகம் அரசால் பூட்டப்பட்டது ; குடும்பம் வறுமையில் வாடியது .இதனால் செல்லப்பன் மரணமடைந்தார், ராமநாதன் தனது எட்டு வயதில் தாய்மாமன் ஆதரவில் வளர்ந்தார்.ஆங்கிலோ –சைனீஸ் துவக்கப் பள்ளியிலும் பின்னர் ஆங்கிலோ – சைனீஸ் நடுநிலைப் பள்ளியிலும் பின்னர் ரங்கூன் ரோடு மாலைநேரப் பள்ளியிலும் பின்னர் விக்டோரிய பள்ளியிலும் கல்வி கற்றார்  . தனது 16 வயதில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார் . பின்னர் மற்றொரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். பின்னர் குடும்பம் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது   ராமநாதனின் பெயரோடு தனது தந்தையாரின் பெயரும் இணைந்து கொண்டதால்     செல்லப்பன் ராமநாதன் என்ற மிகநீண்ட பெயரைப் பெற்றார். .
பெயரைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதனால் ராமநாதன் நாதன் ஆனார். என்ன       காரணம்?நாதனுக்கு சிறு வயது நண்பர்கள் அதிகம். அவர்களில் அதிகமானவர்கள் சீனர்கள் மற்றும்  மலாய்க்காரர்கள். அவர்கள் என் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டனர். இந்தப் பெயரை சுருக்குவோமா, வெட்டுவோமா  என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். "ராமா முதலில் வரட்டுமா கடைசியில் வரட்டுமா என்று கேட்டனர். அவர்களின் விருப்பத்துக்கு விட்டு விட்டேன். நாதன் என்று அழைப்பது தான் சுலபமாக இருக்கிறது என நண்பர்கள் முடிவு செய்தனர்; மறுக்க முடியவில்லை. அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டது என்கிறார் நாதன்.
இனிஷியல் வேண்டுமல்லவா? அதனால் செல்லப்பன் ராமநாதன் என்ற பெயரைச்  சுருக்கி எஸ்.ஆர்.நாதன் ஆனேன். என்கிறார், எஸ். ஆர். நாதன் ஜப்பான் சிங்கப்பூரை ஆக்கிரமித்த போது சப்பான் மொழியைக் கற்றுக்கொண்ட நாதன், சப்பான் போலீசாருக்கு மொழிபெயர்ப்பாளர் ஆனார் .  
தமது குமாஸ்த பதவியை விட்டுவிட்டு மீண்டும் படிக்கத் துவங்கினார்எஸ். ஆர். நாதன் . மலேசியப் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் சேர்ந்து தலைசிறந்த மாணவனாக வெளியேறினார் . பின்னர் பல்வேறு பதவிகள் இவரைத் தேடிவந்தன   குறிப்பாக தொழிலாளர் அமைச்சகத்தின் மருத்துவ சமூகப்  பணியாளராக பணிபுரிந்த இவர், 1962 – இல் தொழிலாளர் ஆராய்ச்சிப் பிரிவின் துணை இயக்குனராக  கடமையாற்றினார் . பின்னர் புலனாய்வுத் துறை இயக்குநராகவும் திறம்பட பணிபுரிந்தார் .இவரது சீரிய செயல்பாடு பல்வேறு படிநிலைகளில் இவரை உயர்த்தியது . எஸ்.ஆர்.நாதன் மலாயா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்து 1954ல் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு அவர் பார்த்த வேலைகளின் பட்டியல் நீளும். பல நிறுவனங்களில் உயர் பதவிகள். சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் இந்தியர் மேம்பாட்டுச் சங்கப் பணிகள். மலேசியா அமெரிக்கா ஆகியவற்றுக்கான சிங்கப்பூர் தூதர் பதவிகள் எனப் பலபதவிகள் வகித்தார் .         
சிங்கப்பூரின் அதிபராக  12 ஆண்டு காலம் பதவி வகித்தார் (செப் 1999 முதல்  31 ஆகஸ்ட் 2011வரை ). சிங்கப்பூர் வரலாற்றில் 12 ஆண்டுகள் அதிபராகப் பதவி வகித்தவர் இவர் ஒருவரே யாவார் . 2011 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெற்ற இவருக்கு வயது 87.இவருடைய துணைவியார் ஊர்மிளா இந்திய வங்காளி வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் மூன்று பேரப் பிள்ளைகள்.என் 12 ஆண்டு அதிபர் பதவிக் காலத்தில் மறக்க முடியாத அனுபவம் என்று ஒன்றிரண்டைச் சொல்ல முடியாது. எதையுமே மறக்க முடியாது என்கிறார் எஸ்.ஆர்.நாதன். தனது அனுபவங்களின் தொகுப்பு நூலை விரைவில் வெளியிடவிருக்கிறார்.
வசதி குறைந்தவர்கள் உதவி தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக 2000 த்தில்     அதிபர்       சவால் அறநிதியை ஏற்படுத்தினார்.சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்திய சமுகத்தினர் 8 / 9 சதவீதம் உள்ளனர். இந்த இலக்கை அடையவே நீண்ட காலமானது. இந்த எண்ணிக்கை உயர நம் பிள்ளைகள் படிப்பிலும் தொழிலிலும் முன்னேறுவதற்கு பெற்றோர் பாடுபட வேண்டும்என்பது இவர் வேண்டுகோள் . "டிவி பார்க்கும் பழக்கம் இன்றைக்கு அதிகரித்து விட்டது. முன்னேற்றத்துக்கு அது தடையாக இருக்கக் கூடாது. டாக்டராக வேண்டும் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று எல்லா பிள்ளைகளும் நினைக்கும் போக்கு வேண்டியதில்லை. பல துறைகளிலும் முன்னேறும் இலக்குடன் அவர்கள் படிக்க வேண்டும்   என்கிறார்   எஸ்.ஆர்.நாதன்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943 ஜூலை மாதம் சிங்கப்பூர் பாடாங் திடலில் ஆற்றிய உரையை கேட்டு எழுச்சி பெற்றது மறக்க முடியாத அனுபவம் என்றார் அவர். நேதாஜியின் கொள்ளுப் பேரன் சுகாதா போஸ் எழுதிய நூலை கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் வெளியிட்டுப் பேசினார்.சிங்கப்பூரின் ஆறாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த எஸ்.ஆர்.நாதன் ஆகஸ்ட் 1999ல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததால் 2005 ஆகஸ்டில் மீண்டும் பதவிக்கு வந்தார்.தைவானைச் சேர்ந்த சிற்பி ஒருவர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் வெண்கலச் சிலையை வடிவமைத்து வழங்கினார். அவருடைய முக உருவம் கொண்ட சிலையை வடிப்பதற்கு ஓராண்டு காலம் பிடித்ததாகசிற்பி  செர்ன் லியன் ஷான் கூறினார் எஸ்.ஆர்.நாதன் ஒரு பழைய கடிகாரத்தையே எப்போதும் கையில் கட்டிக் கொண்டிருக்கிறார். "முப்பது வருஷத்துக்கு முன் 1980ல் என் மாமனார் தந்த அன்பளிப்பு இது. இன்று வரை இந்தக் கடிகாரத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்தி வருகிறேன்   என்கிறார்.

எஸ். ஆர். நாதன் தமிழ் மொழி மீது அதிக பற்றும் மரியாதையும் கொண்டவர். மிக உயர்பதவி வகித்த பிறகும் தனது பாரம்பரியத்தையும் தனது மூதாதையரின் தாய் மண்ணையும் மறக்காதவர்.    சிங்கப்பூரில் தமிழ் கலை  மற்றும் கலாச்சாரம் பரவ பல்வேறு வகையில் பாடுபட்டவர். .பல்வேறு கருத்தரங்கங்களில் பங்குகொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளைச்  செய்தவர்  பல தமிழ் மேதைகளைக்   கவுரவித்ததோடு ஒரு உண்மையான தமிழ்  ஆதரவாளராக இருந்தும்  வருகிறார் . கண்ணதாசன் கவிதைகள் இவருக்கு மிகவும் பிடித்தமானது. ஓய்வு நேரத்தில் கண்ணதாசன் பாடல்களைக்  கேட்பது      வழக்கம்.அதிபர் பதவிக்காலம் நிறைவு பெற்றாலும் எப்போதும்  போலவே இருக்கிறேன். ஓய்வாக இருக்கக் கூடாது; ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் ஆய்வுக் கழகங்கள் சமூக அமைப்புகளில் தொடர்பு இருப்பதால் வீட்டிலேயே ஓய்ந்திருக்காமல் அங்கெல்லாம் சென்று வருகிறேன் என்கிறார் எஸ்.ஆர்.நாதன்
திரு . எஸ்.ஆர்.நாதன் வகித்த பல்வேறு பதவிகள்
1940 - 1941: ஆபீஸ் பையன் மற்றும் பல்வேறு கூலி வேலைகள்.
1955 - 1956: மருத்துவமனை மற்றும் தொழுநோய் மையம் - மருத்துவம் சமூக சேவகர்      சிங்கப்பூர்    சிவில் சேவை.
1956 - 1962: விடுதலை பெற்ற அடிமைகளும் தான் நல அதிகாரி தொழிலாளர்   அமைச்சகம்.
1962 - 1964: உதவி இயக்குநர் தொழிலாளர் ஆராய்ச்சி பிரிவு.
1964 - 1966: இயக்குநர் தொழிலாளர் ஆராய்ச்சி பிரிவு.
1966 - 1970: உதவி செயலாளர் பின்னர் துணை செயலாளர் வெளிநாட்டு அலுவல்கள்        அமைச்சு.
1971: உள்நாட்டலுவல்கள் அமைச்சு குடிமகன் செயலாளர் நடிப்பு.
1971 - 1979: இயக்குனர் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவு (குடிமகன்
செயலாளர் பதவி) பாதுகாப்பு    அமைச்சு.
1973 - 1986: தலைவர் மிட்சுபிஷி சிங்கப்பூர் கனரக தொழில் (லிமிட்டெட்) லிமிடெட்
1979 - 1982: முதல் குடிமகன் செயலாளர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு.
1980 - 1988: இயக்குநர் சிங்கப்பூர் தேசிய எண்ணெய் நிறுவனம்.
பிப்ரவரி 1982 - 1988: நிர்வாக தலைவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் (1975)    லிமிடெட்
ஏப்ரல் 1988 - 1990: மலேஷியா உயர் ஆணையர்.
ஜூலை 1990 - ஜூன் 1996: அமெரிக்க தூதுவர்.
15 ஜூலை 1996 - 17 ஆகஸ்ட் 1999: தொழில்நுட்ப பல்கலைக்கழகம்  இயக்குனர் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனம். நிறுவனம் இப்போது சர்வதேச ஆய்வுகளுக்கான எஸ்  பள்ளி உள்ளது.
18 ஜூலை 1996: சார்பு அதிபர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.
1 செப் 1999 - 31 ஆகஸ்ட் 2011: சிங்கப்பூர் இரண்டாவதுமுறையாக  தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் .     

விருதுகள்
1964: பின்டாங்க்  (பொது சேவை நட்சத்திரம்).
1967: பொது நிர்வாகம் பதக்கம் (வெள்ளி).
1974: மெச்சத்தக்க சேவை விருது.
2007: சிறந்த மாணவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.
2010: பஹ்ரைன் இருந்து அல் காலிபா ஆணை (முதல் நிலை).
2010: Distinguished சர்வீஸ் விருது தங்கம் சிங்கப்பூர்  சாரணர் சங்கம்.
2011: NTUC 50 சிறப்பு அங்கீகாரம் விருதுகள்.
2011: சிவில் சட்டம் மதிப்புறு பணி காரணம்  மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்.
நன்றி : infopidia , dinamalar , window2india