சனி, 3 ஆகஸ்ட், 2013

எள்ளுருண்டை



 
அம்மா !
அடிப்பது புரிந்தது .
ஆனால், காரணம் புரியவில்லை.
இரண்டு கன்னத்திலும்  கிள்ளின அம்மாவின் கைகள்!
அம்மாவின் செயலால்
அழமட்டும் முடிந்தது,
அந்த முதலாம் வகுப்புக் குழந்தையால் .
மீண்டும் சீருடையை சோதனையிட்டது அம்மாவின் கண்கள்.
“எத்தன தடவ சொல்றது
சட்டைப் பையில தின்பண்டம் எதுவும் போடக் கூடாதுன்னு”
அம்மாவின் அதட்டலால்
அடிகளின் காரணம் புரிந்தது குழந்தைக்கு.
அடிகளினூடே,அழுகையினூடே,வலிகளினூடே
குழந்தை பேசியது
பள்ளிக் கூடத்தில இன்னைக்கு எள்ளுருண்ட தந்தாங்க
ம் ......... ம் ..........ம் ...........
உங்களுக்கு ரொம்ப பிடிக்குமுண்னு
சட்டைப்பையில போட்டு கொண்டுவந்தே.....ன்
ம்ஊ............   ம்ஊ............   ம்ஊ..............
ஆ ..............ஆ .....................ஆ ...............
துணிகளைத் துவைக்கையியல் உண்டாகும்
உடல்வலியை விடவும்
மனம் அதிகமாக வலித்தது ,கனத்தது.
குழந்தையின் அழுகையில் தோய்ந்து வந்த செய்தியால்.   

சனி, 13 ஜூலை, 2013

The History of India, A Presentation, Part - I, By Michael Wood, BBC.(Evidence of first Indian settlers found in Tamil Nadu)

Evidence of first Indian settlers found in Tamil Nadu
New Delhi (PTI): A team of Indian scientists have discovered genetic evidence that tribal villagers living in Tamil Nadu were among the first migrants from Africa to settle down in India.
Geneticists led by Prof Ramaswamy Pitchappan of Madurai Kamaraj University have found out that the marker gene in the group of people from a small village Jyothimanickam near Madurai matched those of the first settlers in India. The findings point to the fact that the villagers are among the direct descendants of the first settlers.
Pitchappan who conducted the research in collaboration with Oxford Research University found that DNA of Virumandi Andithevar, a 30-year-old systems administrator from the village, matched M130, the chromosome marker, which gives proof that the first human migration into India took place around 70,000 years ago.
"The M130 is the oldest marker in India and there is no other marker older than that for India. The DNA samples from, Virumandi and others were found to have this marker and we were able to deduce that they were among the first human settlers in India, who obviously spread from Africa," Pitchappan who is Prof Emeritus at the Madurai Kamraj University told PTI.
The findings will be aired on Discovery Television, where historian Michael Wood will narrate the story of the world's most ancient civilization in the six part series 'The Story of India' beginning on April 16.

இனியாகிலும் இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதத் தொடங்குக

வியாழன், 11 ஜூலை, 2013



                    வலி
இயேசுவின் பெயர் தாங்கிய பள்ளி
இலக்குமியின் பெயர் தாங்கிய ஆசிரியை
இராமனின் பெயர் தாங்கிய நான்
மூன்று கடவுளர் ;
ஐந்தாம் வகுப்பில் நான் !
ஏக்கத்தோடுப்  பார்த்தேன்
இக் கடவுளர்களை ?
அருகிலிருக்கும் நண்பனைப் பார்த்தேன் !
அவனும் என்னைப் பார்த்தான் !
சிரித்துக் கொண்டோம் .
அவன் சொன்னான்
“எங்க வீட்டுல இண்ணைக்குப்  பொங்கல்”.
நானும் சொன்னேன் !
எங்க வீட்டுல ................................ ? பேசத் துவங்கியதும்
முறைத்து பார்த்தாள்  இலக்குமியின் பெயர் தாங்கிய ஆசிரியை
கேட்டாள், “ஆர் யு ஸ்பீக்கிங் இன் தமிழ்”
சுனாமியின் வேகத்தில் விரைந்தாள்  ஆசிரியை
எங்களை நோக்கி ! 
எங்கள் கைவிரல்களுக்குள்
பென்சில்கள்  செருகப்பட்டன
எங்கள் கைகள் நசுக்கப்பட்டன
வலியும் அழுகையும்  
எங்களைச் சூழ்ந்தது .   
ஆசிரியையின் பெரியகைகள்
எங்கள் பிஞ்சுக்  கைகளைஐயோ !
முடிந்த மட்டும் அழுதோம் !
ஆசிரியையின் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை.
முடிந்த மட்டும் அழுதோம்!
ஐயோ ! அம்மா ?
“மம்மி” என்றச்  சொல் மறைந்தது எங்கள் உள்ளங்களைவிட்டு.
கண்களில் நிறைந்திருந்த கண்ணீரோடு
ஆசிரியையைப் பார்த்தேன்
கோபத்தால் சிவந்திருந்தது அவள் முகம்.
கண்ணீரால் நிறைந்திருந்தது எங்கள் முகம்.
“சிற்டவுன் டாங்கீஸ்” ?
ஆசிரியையின் கத்தல் எங்கள் வலியையும்  விஞ்சியது. 
கழுதையானோம் நாங்கள் .
கண்ணீர்த்  தோய்ந்த விழிகளினூடே
கண்ணீரால் நனைந்திருந்த  என் நண்பன் மங்கலாகத் தெரிந்தான்.
அதே கண்களால் பலகணி(சன்னல்)   வழியே எட்டிப் பார்த்தேன்
மூன்று கடவுளர்களும்  என் கண்களில் பட்டனர் ?
இயேசு, இராமன், இலக்குமி !
அவர்கள் ஏதோ  பேசிக்கொண்டிருந்தனர்
அவர்கள் தாய்மொழியில்.
கலங்கிய கண்களோடு நாங்கள்.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

அடிக்கடி தொலைந்த தண்ணீர்ப் புட்டி



அம்மா அதட்டிச் சொன்னாள்,
இன்றைக்கும் தண்ணி பாட்டிலைத் தொலைச்சே….!
அடி தொலச்சிடுவேன்.
நாளைக்கு தண்ணி கொண்டு போகாமத்தான்
பள்ளிக்கூடம் போவா.
நீ இண்ணைக்கும்
தொலைஞ்சே...., அடி தொலச்சிடுவேன்!
உனக்கு கண்ணு, மூக்கு, காது, ஒண்ணும் இல்ல.
அதான் நீ அடிக்கடி தொலைஞ்சி போறா ! 
மகளும் மிரட்டினாள்,
புதிதாக வாங்கிய பாட்டிலைப் பார்த்து!
தனது குட்டி விரலை நீட்டி.
                                                                       தமிழாசிரியன்